ஜூலை 31 வரை முழு ஊரடங்கு அமலாகும் தமிழக பகுதிகள்! அடுத்தடுத்து வெளியான அறிவிப்புகள்!
Full Lockdown in Gudiyattam puthukottai town Panchayath
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலானது மிகத் தீவிரமாக இருந்து வருகிறது. எந்தந்த பகுதிகளில் தீவிரமான பரவல் இருக்கிறதோ அந்த பகுதியில் கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா இல்லாத பகுதிகளில் கட்டுப்பாடு தளர்வுடன் இருக்கின்றது. தற்போது ஜூலை 31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், சில இடங்களில் மட்டும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் இருந்து வருகிறது. இருந்தபோதிலும் நீண்ட நாட்களாக ஊரடங்கு இருப்பதினால் மக்கள் அடிப்படை தேவைகளுக்காக இயல்பான வாழ்க்கைக்கு திரும்பி கொண்டிருப்பதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது.
இந்த நிலையில் அதிகப்படியான பாதிப்பையடுத்து குடியாத்தம் நகராட்சி மற்றும் புதுக்கோட்டை நகராட்சி ஆகிய இரண்டு நகராட்சிகளும் ஜூலை 24ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை உள்ள எட்டு நாட்களும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும், எந்தவிதமான கட்டுப்பாடுகளும் தளர்த்த படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் மிக அதிகமாக உள்ள இடங்களில் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Full Lockdown in Gudiyattam puthukottai town Panchayath