தென்கொரியாவில் இருந்து சென்னை விரைந்த பி.சி.ஆர் கிட்கள்..!!
from south Korea PCR test kits arrived Chennai
உலகம் முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வந்த கரோனா பாதிப்பு காரணமாக பல சோகங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், இந்த நோயை உறுதி செய்ய மருத்துவ ரீதியாக பல வழிகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தென்கொரியாவில் இருந்து 1 இலட்சம் பி.சி.ஆர்.கிட்கள் சென்னைக்கு வந்துள்ளது. தென்கொரிய நாட்டில் இருந்து பி.சி.ஆர் கிட்களை தமிழக அரசு நேரடியாக இறக்குமதி செய்துள்ளது.
மேலும், சென்னைக்கு வந்துள்ள பி.சி.ஆர் கிட்களை பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் கரோனா பரிசோதனை விரைவாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக சீன நாட்டில் இருந்து இறக்குமதி செய்த பி.சி.ஆர் கிட்கள் சரியான முடிவுகளை தெரிவிக்காமல், பழுது இருந்ததாக குற்றசாட்டு எழுந்ததை அடுத்து, மீண்டும் வாங்கப்பட்ட நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tamil online news Today News in Tamil
English Summary
from south Korea PCR test kits arrived Chennai