பிரிட்ஜ் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி.. மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.!
Fridge blast in chengalpattu 3 peoples death collector enquiry
செங்கல்பட்டு மாவட்டத்தில் பிரிட்ஜ் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் தற்போது நவீன தொழில்நுட்பங்கள் மூலம் முன்னேறி வருகிறது. இந்த நவீன தொழில்நுட்பங்கள் மனிதர்களுக்கு நிறைய நன்மைகள் செய்தாலும், அதே அளவிற்கு தீங்கும் விளைவிக்கின்றன.
அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகிலுள்ள கோதண்டராமன் நகரில் பிரிட்ஜ் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பிரிட்ஜ் வெடித்த விபத்து ஏற்பட்ட வீட்டில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர். ராகுல்நாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், மின்கசிவு காரணமாக பிரிட்ஜ் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக பிரிட்ஜ் உபயோகப்படுத்தாததால் வெடித்துள்ளது. நீண்ட நாள் பயன்படுத்தாத எலக்ட்ரானிக் பொருட்களை பரிசோதித்து பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
English Summary
Fridge blast in chengalpattu 3 peoples death collector enquiry