ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி!
four ias officer transfer
நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, கோவை மாநகராட்சி ஆணையராக இருந்த ஸ்ரவன் குமார் ஜடாவத் வேளாண்மைத்துறை துணை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர், கோவை மாநகராட்சி பள்ளிகளில் மூன்றாம் மொழி குறித்த பிரச்சினையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாண்டியன் ஐ.ஏ.எஸ் கோவை மாநகராட்சி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பழனி கோவில் நிர்வாக அதிகாரி பதிவி வகித்து வந்த ஜெயசந்திரபானு ரெட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் இருந்த பிரபாகர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
English Summary
four ias officer transfer