சென்னை உள்ளிட்ட 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.! மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் கனமழை பெய்து வந்தது.

இந்தநிலையில், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இரவு முதல் தற்போது வரை கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக  சென்னை, செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்ட அறிவிப்பில் சென்னை மற்றும் செங்கல்பட்டு  மாவட்டத்தில் இரவு முதல் கனமழை பெய்வதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் கல்லூரிகள் வழக்கம் போல என தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுர மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. 

அதே போல, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்ட்டுள்ளது. இது தொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்ட அறிக்கையில், கனமழை பெய்வதால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வரும் கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four district schools holiday for heavy rain


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->