கடலூரில் திமுகவிற்கு ஏற்பட்ட இழப்பு! முக்கிய தலைவர் மரணம்! சோகத்தில் ஸ்டாலின்!
Former neyveli TMS Leader ramakrishnan passed away
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் , நெய்வேலி நகர தி.மு.க. செயலாளரும் - நெய்வேலி தொ.மு.ச. முன்னாள் தலைவருமான திரு.ராமகிருஷ்ணன் மறைவு செய்தி அறிந்து, நேரில் சென்று அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது மறைவு குறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தி'
திராவிட முன்னேற்றக் கழக தொமுச முன்னாள் தலைவர் திரு நெய்வேலி ராமகிருஷ்ணன் அவர்களின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த துயரம் அடைந்தேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
கழகத்தில் ஆரம்பகாலத்தில் வார்டு செயலாளராகவும், பிறகு ஐந்து முறை நெய்வேலி நகர கழக செயலாளராகவும் பணியாற்றி தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் அயராது பாடுபட்ட அவரது மறைவு கழகத்திற்கு பேரிழப்பாகும்.
திரு நெய்வேலி ராமகிருஷ்ணனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தொமுச மற்றும் கழக நிர்வாகிகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என ஸ்டாலின் தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
English Summary
Former neyveli TMS Leader ramakrishnan passed away