கரூர் விஞ்ஞானிக்கு நோபல் பரிசு பார்சல் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த சில மாதமாக ஏற்பட்டுள்ள மின்தடைக்கு பராமரிப்பு பணிகள், அணிகளின் மின்கம்பி பயணங்கள் போன்றவை காரணம் என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை சந்தித்தது. 

மேலும், எதோ சில பகுதிகளில் இதுபோன்ற பிரச்சனை ஏற்படுவது வாஸ்தவம் என்றாலும், தமிழக முழுவதும் அணில் காரணமாக மின்தடை ஏற்படுகிறதா?. சென்னை போன்ற பெருநகரத்தில் புதைவடை மின்கம்பியில் பூமிக்கடியில் அணில்கள் ஓடுகிறதா? என்ற கேள்வியும் எழுந்தது.

இந்நிலையில், மதுரை கோரிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு, " இந்த அமைச்சரவை அமைச்சர்கள் பெரும் விஞ்ஞானிகள். கடந்த ஆட்சியில் வெளிநாடுகளுக்கு அணில்கள் தப்பி சென்று இருந்தது. 

திமுக ஆட்சி அமைந்ததும் அணில்கள் தாயகம் திரும்பி வந்து, மின் கம்பிகளை சேதப்படுத்தி வருகிறது. இதுபோன்ற விஞ்ஞான தகவலை கண்டறிந்த மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சருக்கு, நோபல் பரிசு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் " என்று கலாய்த்து சென்றார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former Minister Sellur K Raju Recommend Minister Senthil Balaji Nobel Price 26 June 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->