புதிய சிக்கலில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன்.!! - Seithipunal
Seithipunal


முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக மனுவில், " நடிகை சாந்தினிக்கு நான் எந்த விதமான தொல்லையும் வழங்கவில்லை.

அவரது பெற்றோருக்கு மருத்துவ சிகிச்சைக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது என்று கேட்டார். எனக்கு தெரிந்தவர் மூலமாக ரூ.5 இலட்சம் கடன் வாங்கிக்கொடுத்த நிலையில், கடனை திரும்பி கேட்டபோது என் மீது அவதூறான புகார் அளித்திருக்கிறார். 

இவருடன் பிரபலமானவர்களை குறிவைத்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் செயல்பட்டு வருகிறது. நடிகை சாந்தினி ஏற்கனவே மலேஷியாவில் இதுபோன்று பலரை ஏமாற்றி இருக்கிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் விசாரணை மேற்கொள்ளாமல் உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கருக்கலைப்பு செய்யக்கூறி அவரை நான் எந்த விதமாகவும் மிரட்டவில்லை. அவரே கருக்கலைப்பு செய்துகொண்டார் " என்று தெரிவித்துள்ளார். நடிகை சாந்தினி கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் முன்னாள் அமைச்சரை தேடி வரும் நிலையில், அவர் முன்ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தார். முன் ஜாமீன் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தார். முன்ஜாமீன் வழங்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்து முன்ஜாமீன் தள்ளுபடி செய்துள்ளனர். 

இந்நிலையில், நடிகை அளித்த மோசடி புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. முன்ஜாமீன் வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மணிகண்டன் தலைமறைவாகியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

former minister manikandan case 2 police team


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->