சசிகலா ஒரு பேய்.. மனசாட்சியும் இல்ல., ம.. இல்லை..! முன்னாள் அமைச்சர் சரமாரி விமர்சனம்.! - Seithipunal
Seithipunal


சசிகலா ஒரு தாய் கிடையாது., அவர் ஒரு பேய் என முன்னாள் அமைச்சர் சரமாரியாக விமர்சித்துள்ளார். 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கலந்துகொண்டு தொண்டர்களிடையே உரையாற்றினார். 

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், " சசிகலா ஒரு தாய் அல்ல., அவர் ஒரு பேய். அதிமுகவை குறுக்கு வழியில் கைப்பற்ற கடுமையான நாடகம் நடத்தி வந்தார். 

அவரது நாடகம் எதுவும் தற்போது வரை எடுபடவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு என்ன நடந்தது? என்பது தொடர்பான விஷயம் சசிகலாவுக்கு மட்டுமே தெரியும். மனசாட்சி என்ற ஒன்று இருந்தால் அதனை சசிகலா வெளியே கூறுவார். 

அவருக்கு மனசாட்சியும் கிடையாது ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது " என்று தெரிவித்தார். ஏற்கனவே அதிமுக - சசிகலா இடையே பல பரபரப்பு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் அமைச்சரின் சசிகலா தொடர்பான சரமாரி விமர்சனம் அவர்களுக்குள் உள்ள அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former Minister AIADMK Natham Viswanathan Pressmeet about Sasikala 19 June 2021 at Dindigul AIADMK Office


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->