#Breaking: முன்னாள் நீதிபதி கர்ணன் கைது..! - Seithipunal
Seithipunal


முன்னாள் நீதிபதி கர்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணன் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னைக்கு அருகேயுள்ள ஆவடி பகுதியில் வசித்து வந்த நீதிபதி கர்ணன், மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

ஏற்கனவே பல சர்ச்சை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையாகியிருந்த நிலையில், சமீபத்தில் வெளியான வீடியோ காட்சியில் நீதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை இழிவாக பேசி இருந்தார். இது குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

மேலும், இது குறித்த விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் நீதிபதி கர்ணனை ஏன் சைபர் கிரைம் காவல் துறை அதிகாரிகள் இன்னும் கைது செய்யவில்லை என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார். இந்நிலையில், ஆவடி வீட்டில் இருந்த முன்னாள் நீதிபதி கர்ணனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former Judge Karnan Arrest By Police 2 December 2020


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->