மொட்டை மாடியில் சிறுத்தை தோல் காய வைத்த விவகாரம்..!! தலைமறைவாக இருந்த முன்னாள் கவுன்சிலர் கைது..!! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டம் அருகே வடவீரநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அம்மா பட்டியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற கவுன்சிலர் துரைபாண்டியன் வீட்டில் சிறுத்தையின் தோல் மொட்டை மாடியில் காய வைக்கப்பட்டுள்ளதாக கடந்த மாதம் 17ஆம் தேதி வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து வனத்துறையினர் துரைப்பாண்டியன் வீட்டிற்கு சென்று பார்த்த போது துரைப்பாண்டியன் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து அவரது வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று பார்த்த போது அங்கு சிறுத்தையின் தோல் மஞ்சள் பூசி காய வைத்திருந்தை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்த வனத்துறையினர் துரைபாண்டியனை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த துரைப்பாண்டியனை வனத்துறையினர் தற்பொழுது கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் துரைப்பாண்டியனுக்கு உதவியாக இருந்த அவரது மனைவி செல்லம்மாள் தற்பொழுது தலைமுறைக்காக உள்ளார்.

இது குறித்து துரைப்பாண்டியனிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் மலையடிவாரத்தில் இறந்து கிடந்த சிறுத்தையின் தோலை உரித்து அதன் உடல் பாகங்கள் சுடுகாட்டில் வைத்து எரித்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கைது செய்யப்பட்ட துரைப்பாண்டியன் லட்சுமிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் இதுபோன்று வேறு ஏதேனும் வனவிலங்குகளை வேட்டையாடி கொன்றிருக்கிறாரா..?? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வனத்துறையினர் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former councilor arrested for drying leopard skin on terrace


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->