ஓரினச் சேர்க்கைக்கு கட்டாய படுத்திய கொடூரன்!! வர மறுத்ததால் மர்ம உறுப்பு துண்டிப்பு!!
forced and cut man organ
சென்னை மாதவரம் அருகே ரெட்டேரி மேம்பாலம் பகுதியில் கூடங்குளத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவர் நேற்று மதுபோதையில் தூங்கியுள்ளார். அப்போது திடீரென அலரல் சத்தம் கேட்டுள்ளது. அலறல் சத்தம் கேட்டு சாலையில் சென்றவர்கள் விரைந்து சென்று பார்த்தபோது அங்கு நாராயணன் மர்ம உறுப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
இதனையடுத்து நாராயணனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவர்கள் நாராயணனிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. நாராயணன் கூறுகையில் ஓரினச்சேர்க்கைக்கு ஒருவர் என்னை அணுகினார். நான் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அவர் எனது மர்ம உறுப்பை துண்டித்து விட்டார் என்று கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, இதே பகுதியில் படுத்திருந்த கொளத்தூரைச் சேர்ந்த அஸ்லம்பாஷா என்பவர் மர்ம உறுப்பு துண்டிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் அதே போன்ற சம்பவம் மீண்டும் நடந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.