சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நேற்று கொரோனாவால் 2,115 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 54,449 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 1,630 பேர் பூரண நலன் பெற்றதை அடுத்து, மொத்த பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 30,271 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 41 பேர் பலியானதை அடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 666 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியான பட்டியலில் சென்னையில் ஏற்கனவே 37,070 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று மேலும் 1,322 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 38,327 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் உணவகங்களில் இன்று முதல் பார்சலில் மட்டுமே உணவு விற்கப்படும் என தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 30ம் தேதி வரை பார்சலில் மட்டும் உணவு விற்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர். 

தற்போது, சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உணவகங்களில் பார்சல்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டுமே வழங்க முடிவு என  தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

food will only be sold at the parcel


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->