சிகரெட் பற்ற வைத்ததும் உடல் முழுவதும் தீ பற்றி பரிதாபமாக பலியான இளைஞர்.! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற தமிழ்குடிமகன் (34) சென்னையில் ஆட்டோ ஓட்டி குடும்பம் நடத்தி வந்துள்ளார். நேற்று காலை தரமணி அருகே ஹோட்டல் ஒன்றுக்கு சென்ற அவர் சிறிது நேரத்தில் உடம்பில் தீப்பற்றிய நிலையில் ஹோட்டலில் இருந்து வெளியே வந்து விழுந்துள்ளார். 

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் மணிகண்டன் உயிரிழந்துள்ளார். 

இது குறித்து காவல்துறையினர் பாட்டிலில் இருந்த பெட்ரோலை ஆட்டோவில் ஊற்றும்போது அவர் பிடித்த சிகரெட் தீப்பொறி பட்டு அவர்மீது தீப்பற்றி உள்ளது என்று தெரிவிக்கின்றனர். ஆனால் ,அருகில் இருந்தவர்களும் அவருடைய உறவினர்களும் அந்த ஆட்டோ கேஸ் மூலம் இயங்க கூடியது. அதற்கு பெட்ரோல் தேவை இல்லை.

அவர் ஹோட்டலுக்கு சென்று விட்டு திரும்பிய பொழுது தான் ஏதோ நடந்திருக்கிறது என்று தெரிவிக்கின்றனர். அந்த ஓட்டலின் உரிமையாளர் மணிகண்டனின் பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்.

ஹோட்டல் உள்ளே சென்ற பொழுது ஆட்டோ ஓட்டுநரான மணிகண்டனுக்கும், உரிமையாளருக்கும் என்ன நடந்தது என்பது குறித்து சரிவர தெரியவில்லை. போலீசார் இந்த சம்பவத்தை திசை திருப்ப முயற்சிப்பதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fire accident in petrol bunk during smoking


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->