சென்னையில் 5 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.! - Seithipunal
Seithipunal


 

சென்னை தியாகராய நகரில் உள்ள 5 மாடி கட்டிடத்தில் தீப்பற்றி எரிவதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தியாகராய நகர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் 5 மாடி கட்டிடத்தில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஆனால்  தீயணைப்பு துறையினர் வருவதர்க்குள் 5 மாடி கட்டிடத்தில் இயங்கி வந்த  அலுவலகத்தில் இருந்த பெரும்பாலான ஆவணங்கள்  தீயில் எரிந்து சேதமாகின. சேத மதிப்புகள் குறித்த விவரங்கள் இன்னும் கணக்கிடப்படாத நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீவிபத்து ஏற்பட்டுள்ள இந்த அலுவலகம் சேகர் ரெட்டிக்கு சொந்தமானதாகும்.

தொழிலதிபர் சேகர் ரெட்டி  பல கோடி கருப்பு பணம் மற்றும் புதிய ரூ. 2 ஆயிரம் நோட்டுகள் வைத்திருந்ததாக சேகர் ரெட்டிக்கு சொந்தமான அவருடைய இல்லம் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ள தீ நகர் அலுவலகமும் சேகர் ரெட்டிக்கு சொந்தமானது தான். இந்த அலுவலகத்திலும் சோதனை சிபிஐ நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

காலை நேரத்தில் ஊழியர்கள் அலுவலகத்தை திறப்பதற்கு முன்பே தீ விபத்து ஏற்பட்டதால் உள்ளே எந்த ஊழியரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fire accident in chennai t nagar


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->