நள்ளிரவில் வீட்டில் பிடித்த தீ, ஒரே குடும்பத்தை சேர்ந்த 5பேர் உடல்கருகி பலி!
fire accident five members died
சேலம் மாவட்டம் குரங்குசாவடியில் அன்பழகன் என்பவர் வசித்து வந்தார். இவர் சொந்தமாக மரம் அறுவை மில் வைத்துள்ளார். நேற்றிரவு அன்பழகன் மற்றும் அவரது தம்பி குடும்பத்தினர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், அன்பழகனின் வீட்டில் திடீரென நள்ளிரவு 2 மணி அளவில் தீப்பிடித்தது. இதை அறிந்த அன்பழகன் மற்றும் அவரது தம்பி குடும்பத்தினர் அனைவரும் உயிர் தப்ப முயற்சி செய்தனர். ஆனால் தீ விபத்தினால் ஏற்பட்ட புகை காரணமாக அவர்களால் வெளியில் வர முடியவில்லை.
இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த கார்த்திக் , மகேஸ்வரி, முகேஷ், சர்வேஷ், புஷ்பா உள்ளிட்டோர் உடல் கருகி உயிரிழந்தனர். இதையடுத்து மற்றொரு அறையில் படுத்து இருந்த அன்பழகன் மற்றும் அவரது பெற்றோர் சேட்டூ, அமுதா ஆகியோர் லேசான தீக்காயத்துடன் வீட்டில் இருந்து வெளியில் ஓடி வந்து உயிர் தப்பினர்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். வீட்டில் மின் கசிவு ஏற்பட்டூ தீ விபத்து நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது.
English Summary
fire accident five members died