வீடியோ காலின் போது, பற்றிய தீ..! வெளிநாடு வாழ் தமிழருக்கு நேர்ந்த பரிதாபம்.!
fire accident death when video call with wife
கடலூரை சேர்ந்த ராஜசேகர் என்பவர் சூடானில் வேலைப்பார்த்து வந்த போது, தீ விபத்தில் சிக்கி இறந்தபோது அவருடைய மனைவியுடன் அவர் வீடியோ காலில் பேசிகொண்டு இருந்துள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் இருக்கும், பன்ரூட்டி பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவருக்கு கலை சுந்தரி என்ற மனைவியும், சிவானி என்ற மகளும் இருக்கின்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ராஜசேகர் குடும்ப வறுமை சூழல் காரணமாக சூடானில் வேலைப்பார்த்து வந்துள்ளார்.
அவர் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ஊருக்கு திரும்பி வர இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அவர் வேலைப்பார்த்து வந்த தொழிற்சாலையில் நடந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்த விசாரணையில், தற்போது அவருடைய மனைவி கலை சுந்தரி என்பவர் விபத்தில் இறப்பதற்கு முன்பாக தனது கணவர் தன்னுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்ததாகவும், அப்போது தான் திடிரென அலறல் சத்தம் கேட்ட போது அப்பகுதியில் தீ விரவிய போது கால் கட் ஆகியதாகவும் கண்ணீர் மல்க அவர் கூறியுள்ளார்.
English Summary
fire accident death when video call with wife