பட்டாசு ஆலையில் தீவிபத்து.. தொழிலாளி பரிதாப பலி.. விருநகர் அருகே நிகழ்ந்த சோகம்..!
Fire accident at Pattasu Factory In viruthunagar
பட்டாசு ஆலை விபத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், கத்தாளம்பட்டியில் சிதம்பரம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்ப்பட்டு வருகிறது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், சம்பவதன்று வெடி மருந்து ஊராய்வின் காரணமாக விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில், இடிப்பாடுகளில் சிக்கி விக்னேஷ் என்ற இளைஞர் உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணையப்புதுறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் சிதம்பரத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Fire accident at Pattasu Factory In viruthunagar