திருவாரூர்: கொரோனா விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு அபராதம்...!!
Fines for shops violating Corona rules
கொரோனா விதிமுறைகளை மீறிய வணிகர்களுக்கு அபராதம் விதிக்கப்படுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா 3 அலையை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது மாவட்ட நிர்வாகம். சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது.
அதுமட்டுமின்றி வணிகர்களிடமும் கடைகளில் பின்பற்ற வேண்டிய கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடுமையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், நன்னிலம் பகுதியில் உள்ள கடைகளில் பேரூராட்சி செயல் அலுவலர் ஹரிராமமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கொரோன விதிமுறைகளை பின்பற்றாத வணிகர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.இதே போல நன்னிலம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கொரோனா விதிமுறைகளை மீறிய 25 கடைகாரர்களுக்கு ரூ500 முதல் ரூ10,500 வரை அபராதம் விதிக்கப்பட்டது.
English Summary
Fines for shops violating Corona rules