படுகொலை செய்யப்பட்ட பைனான்சியர்.. தேர்தல் முன்விரோத்தால் கொலையா ? காவல்துறை தீவிர விசாரணை..!
financier Murder Near hosur
பைனான்சியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அந்திவாடி பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் . இவர் அந்த பகுதியில் ஃபைனான்ஸ் தொழில் செய்து வருகிறாரர். இந்நிலையில், நேற்றிரவு அவர் வீட்டு வாசலில் நின்று வாசலில் செல்போன் பேசி கொண்டிருந்த போது மர்ம நபர்கள் அவரை வெட்டி படுகொலை செய்துள்ளானர்.
அவரின் அலறல் சத்தம்கேட்டு வந்த அக்கம்பக்கதினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், நடந்து முடிந்த நகர்புற தேர்தலில் அவர் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வெற்றிபெற வைத்துள்ளார். இதனால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
financier Murder Near hosur