பிப்ரவரி 5 ஆம் தேதி ஒரு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
feb 5 local holiday to tanjore district
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பிப்ரவரி 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவானது பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன்காரணமாக அந்த மாவட்டத்திற்கு மட்டும் அன்று உள்ளூர் விடுமுறை அளித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பிப்ரவரி 5ஆம் தேதிக்கு பதிலாக பிப்ரவரி 22ஆம் தேதி மாற்று வேலை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயில் 1000 ஆண்டுகளை கடந்து, சோழப்பேரரசின் தமிழ் மன்னர்களின் பெருமையை உலகிற்கு உணர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது. தமிழர்களின் கட்டிட கலைக்கு சான்றாகவும் நிலைத்து நிற்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சை குடமுழுக்கு விழாவானது ஆகம விதிப்படி நடைபெற வேண்டுமென ஒரு பிரிவினரும் தமிழ் வழிபாட்டு முறைப்படி நடைபெற வேண்டும் என ஒரு பிரிவினரும் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
feb 5 local holiday to tanjore district