ஆற்றில் மூழ்கிய மகளைக் காப்பாற்ற முயன்ற தந்தை.. நீரில் மூழ்கி 3 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


ஆற்றில் மூழ்கி தந்தை மகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளபட்டியில் வசிக்கும் முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று அம்மாபட்டி கிராமத்தில் இருக்கும் தர்காவுக்கு சென்று விட்டு குடகனாற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர்.

 இந்த நிலையில் ஷேக் பரீத் என்பவரது மகள் மௌபியா (வயது 12) குளிப்பதற்காக ஆற்றில் இறங்கியுங்கியுள்ளார். அப்போது நீரில் அடித்துச் செல்லப்பட்டு ஆழமான பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து அவரது தந்தை ஷேக் பரீத் (வயது 40) மற்றும் ரியாஜுதீன் (வயது38) ஆகிய இருவரும் சிறுமியை காப்பாற்றுவதற்காக ஆற்றில் இறங்கிய போது அவர்களும் அடித்து செல்லப்பட்டனர்.

இதனை அடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு 3 பேரின் உடல்களையும் மீட்டனர். பின்னர் 3 பேரின் உடல்களும் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Father tried to save his daughter drowned in the river death


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->