புதுக்கோட்டை: மகனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனமுடைந்த தந்தை விஷம் குடித்து தற்கொலை.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் மகனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனமுடைந்த தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள துவரன்கொல்லைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் விவசாயி பழனிவேல்(65). இவருக்கும், இவரது மகனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த பழனிவேல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதைப்பார்த்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக பழனிவேலை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பழனிவேல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Father suicide in Pudukkottai


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->