#கள்ளகுறிச்சி || தலைக்கேறிய மதுபோதை.. மகனை கொலை செய்த தந்தை..! - Seithipunal
Seithipunal


மதுபோதையில் மகனை கொலை செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.

கள்ளகுறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் மயில். இவர் கேரளாவில் மீன் பிடிதொழில் செய்து வருகிறார். மகளின் பிரசவத்திற்காக இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு  சொந்த ஊருக்கு வந்துள்ளார். மயிலுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அடிக்கடி அவர் வீட்டில் உள்ளவர்களிடம் தகராற்றில் ஈடுப்படுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

சம்பவதன்று, மதுபோதையில் வந்த அவர் மகன் சசிகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே அங்கிருந்த கடப்பாறையால் மகனை தாகி கொலை செய்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மயிலை கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Father Killed His son in Kallakurichi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->