செலவுக்கு பணம் கேட்ட மகன்.. ஆத்திரத்தில் தந்தை செய்த கொடூர செயல்..!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உத்தனப்பள்ளி பகுதியை சேர்ந்த ஒருவர், அவரது மகன் செலவுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்த காரணத்தினால் மகனை வெட்டிக் கொன்று காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

Image result for death seithipunal

சானமாவு பகுதியை சேர்ந்தவர் லோகேஷ், இவர் 3 மாதங்களுக்கு முன்பு கலா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துக் கொண்டார். பின்னர், சென்னையில் செல்போன் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். திருமணத்திற்கு பிறகு வேலைக்கு போகாமல் தினமும் குடித்துவிட்டு தந்தை கிருஷ்ணப்பாவிடம் செலவுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது.

இதை தொடர்ந்து, பணம் கேட்டு செய்த தகராறில் கட்டையால் தந்தை கிருஷ்ணப்பாவை லோகேஷ் தாக்க முயன்றுள்ளார். அந்த கட்டையை பிடிங்கி மகனை தாக்கிய கிருஷ்ணப்பா அருகில் இருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

father killed his son for asking money


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->