மகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தற்கொலைக்கு முயன்ற தந்தை.. சீட்டாட செல்லாதே என கூறியதால் நடந்த விபரீதம்..!
Father killed his daughter and attempt Suicide
குழந்தையை கொன்றுவிட்டு தந்தை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் ஆலங்காடு கிராமத்தில் வசிப்பவர் கோபாலகிருஷ்ணன் இவரது மனைவி வீரமாக இவர்களுக்கு சுமத்ரா தேவி என்ற பெண் குழந்தை உள்ளது. லோட் மேனாக வேலை செய்யும் கோபாலகிருஷ்ணனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
குடித்துவிட்டு சீட்டாட்டத்தில் கோபாலகிருஷ்ணன் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் சம்பவத்தன்று தனது குழந்தையுடன் கோபாலகிருஷ்ணன் சீட்டாட்டத்திற்கு சென்றுள்ளார். அதனைக் கண்ட அவரது மனைவி வீரம்மாள் குழந்தையை வீட்டில் செல்லுமாறு கூறியுள்ளார்.
இதனால், இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. ஒருக்கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர் குழந்தைக்கு பூச்சி மருந்து கொடுத்து விட்டு தானும் குடித்துள்ளார். இவர்கள் இருவரையும் மீட்ட அங்குள்ளவர்கள் மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு குழந்தை பிறந்து மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Father killed his daughter and attempt Suicide