பெற்ற பிள்ளைகளை, 150 அடி பள்ளத்தில் தூக்கி வீசிய தந்தை.! காரணத்தை கேட்டு அதிர்ந்த காவல்துறை..! - Seithipunal
Seithipunal


மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக தான் பெற்ற இரண்டு குழந்தைகளையும் 150 அடி பள்ளத்தில் தூக்கி வீசி கொலை செய்த தந்தை சிரஞ்சீவியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கின்றது.

 நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொல்லிமலை அருகே சீக்குப் பாறை சென்ற பகுதியில் சிரஞ்சீவி என்பவர் தன்னுடைய குழந்தைகள் இருவரையும் அழைத்துச் சென்றுள்ளார். அவருக்கு ஸ்ரீராஜ் என்ற 8 வயது மகனும், கவியரசி என்ற 5 வயது மகளும் இருக்கின்றனர்.

இந்நிலையில், வியூபாயிண்ட் பகுதிக்கு அவர்களை அழைத்து சென்ற சிரஞ்சீவி இரண்டு குழந்தைகளையும் 150 அடி பள்ளத்தில் தூக்கி வீசி எறிந்தார். விழுந்த வேகத்திலேயே இரு குழந்தைகளும் துடிதுடித்து உயிரிழந்துள்ளன.

இது குறித்து காவல் துறைக்கு தகவல் கிடைக்க, விரைந்து வந்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கணவன் மனைவி இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக சிரஞ்சீவி தன்னுடைய மகன் மற்றும் மகளை 150 அடி பள்ளத்தில் தூக்கி வீசி கொலை செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

father killed children in namakal


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->