10 மாத குழந்தையை தந்தை செய்த கொடூரம்.. மனைவி கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்..!  - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்திலுள்ள காரியாபட்டி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் அமல்ராஜ் மற்றும் அவரது மனைவி சுஸ்மிதா. இவர்கள் இருவருக்கும் ஒன்றரை வயதான ஆண் குழந்தை ஒன்று உள்ளது. சம்பவம் நடந்த அன்று இவரது குழந்தையை தனியாக வீட்டில் விட்டுவிட்டு சுஷ்மிதா அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அதன் பின்னர் வீட்டிற்கு திரும்பிய சுஷ்மிதா தனது குழந்தை தண்ணீர் தொட்டியில் சடலமாக மிதந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளார். இதை தொடர்ந்து சுஸ்மிதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள்.

இதை தொடர்ந்து,தகவல் அறிந்து வந்தபோலீசார் சுஸ்மிதாவின் குழந்தையின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது குழந்தையின் தாய் சுஸ்மிதா அந்த குழந்தையின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், குழந்தையை தனது கணவர்தான் கொலை செய்திருக்கக் கூடும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், இருவருக்கும் திருமணம் முடித்து, குழந்தை பிறந்த நாள் முதல், இது தனக்கு பிறந்த குழந்தை இல்லையென்று தகராறு செய்து குழந்தையை பார்க்க வராமலே இருந்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதைக் கேட்ட காவல்துறையினரும், அங்கு கூடியிருந்த மக்களும் அதிர்ச்சி அடைந்தார்கள். பின்னர் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

father kill his 10 months baby


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->