கன்னியாகுமரி அருகே சோகம்.! மகளைப் பார்ப்பதற்கு சென்ற தந்தை.! வாகனம் மோதி பலி.!
Father died in vehicle collision in kanniyakumari
கன்னியாகுமரி மாவட்டத்தில் மகளை பார்ப்பதற்காக சென்ற தந்தை வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு வளவிளை பகுதியை சேர்ந்தவர் வேலப்பன் (65). இவர் நேற்று நாகர்கோவிலில் உள்ள தனது மகள் சரண்யாவை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்பொழுது மொட்டவிளை சந்திப்பில் சென்ற போது எதிர்பாராத விதமாக அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று வேலப்பன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த வேலப்பனை அப்பகுதியில் இறந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வேலப்பன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து வேலப்பனின் மகன் கொடுத்த புகாரின் அடிப்படையில், இரணிகள் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Father died in vehicle collision in kanniyakumari