மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி...!! திண்டுகல்லில் நடந்த சோகம்...!!
Father and son killed by electric shock
மின்சாரம் தாக்கி தந்தை மற்றும் மகன்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் செட்டியபட்டி மடப்புரம் காளிகோவில் பகுதியில் வசித்து வருபவர் திருப்பதி (40). இவருக்கு திருமணமாகி வசந்தா என்ற மனைவியும் விஜயகணபதி (17), சந்தோஷ் (14) இரு மகன்களும் உள்ளனர்.
சிறுவர்கள் இருவரும் அருகில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர், இந்நிலையில், சம்பவதன்று காலை வசந்தா வேலைக்கு சென்றுள்ளார். இதனால் மகன்களை பள்ளிக்கு தயார் செய்து அனுப்ப திருப்பதி வீட்டில் இருந்துள்ளார். அப்போது சுவிட்சை போட முயற்சி செய்த போது எதிர்பாராத விதமாக அவருக்கு ஷாக் அடித்தது.
அவரின் சத்தம் கேட்டு அங்கு வந்த அவரது மகன்கள் தந்தையை காப்பாற்ற முயன்ற போது அவர்களையும்மின்சாரம் தாக்கியுள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கதினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Father and son killed by electric shock