அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த வாலிபரும்., காப்பாற்ற சென்ற தந்தையும் பரிதாப பலி..!! அரியலூரில் நடந்த சோகம்..!! - Seithipunal
Seithipunal


மின்சாரம் தாக்கி தந்தை மகன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம், கீழ்பழுவூர் பகுதியில் வசித்து வருபவர்  முத்துசாமி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும்  2 மகள்களும் 1 மகனும் உள்ளனர். முத்துசாமி அந்த பகுதியில் விவசாய வேலை செய்து வருகிறார்.

முத்துசாமியின் மகன் சங்கர் அங்குள்ள கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். சங்கர் வேலை முடித்து இரவு வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்நிலையில், நேற்றிரவு பலத்த காற்றுடன் கனமழையால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து மின்கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளன. மழை நின்றவுடன் சங்கர் தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

அப்போது எதிர்பாரத விதமாக தனது வீட்டின் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்துள்ளார். இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அவரின் சத்தம் கேட்டு அங்கு வந்த அவரது தந்தை முனுசாமி அவரை காப்பாற்ற முயன்றுள்ளார்.

இதனால் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இந்த சம்பவத்தால் தந்தை மகன் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Father and son killed after stepping on power line


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->