தந்தையின் இச்சைக்கு இரையான மகனின் காதலி.. அரங்கேறிய படுபாதக செயல்..!
father abused his son's lover
நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் அருகே செம்போடை என்னும் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பு நித்யானந்தம். இவர், காய்கறி கடை வைத்து வியாபாரம் நடத்தி வந்துள்ளார். நித்தியானந்தனின் மகன் முகேஷ்கண்ணன் என்பவர் அவருடன் ஐ.டி.ஐ. படித்து வந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இதை தொடர்ந்து, இருவரும் படித்து முடித்த பின் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் சேர்ந்து வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தனர். தனது மகன் காதலிப்பதை விரும்பாத கருப்பு நித்யானந்தம் அவர்கள் காதலைத் துண்டிக்க திட்டம் ஒன்று தீட்டியுள்ளான்.
இந்த நிலையில் சம்பவத்தன்று கருப்பு நித்யானந்தம், தனது மகனின் காதலி வீட்டுக்கு சென்று அந்த பெண்ணை தனியாக சந்தித்துள்ளார். பின், அவருடன் வந்தால் மகனுக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி அழைத்துள்ளார்.
அவரது வார்த்தையை நம்பி அந்த பெண், அவருடன் சென்றுள்ளார். ஆனால் கருப்பு நித்யானந்தம் செம்போடை பகுதிக்கு அந்த பெண்ணை காரில் கடத்தி சென்று, ஒரு கடைக்கு அழைத்து சென்று அந்த பெண்ணை மிரட்டி தாலி கட்டி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
அதன் பின்னர், அந்த பெண்ணை அவரிக்காடு கிராமத்த்தில் ஒருவரது வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளார். இந்த நிலையில் அந்த பெண் அந்த வீட்டில் இருந்து தப்பிச்சென்று வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதை தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தி வந்தார்கள். விசாரணையில், கருப்பு நித்யானந்தம் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. மேலும் அவருக்கு உடந்தையாக அவரிக்காடு கிராமத்தை சேர்ந்த சக்திவேல், அவரது மனைவி பவுன்ராஜவள்ளி ஆகியோர் செயல்பட்டதும் தெரிய வந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பு நித்யானந்தம், சக்திவேல், பவுன்ராஜவள்ளி ஆகிய 3 பேரையும் கைது செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.
English Summary
father abused his son's lover