திருவாரூர்: குறைதீர் கூட்டத்தில் தூங்கி வழிந்த அதிகாரிகள்., விவசாயிகள் அதிருப்தி..!! - Seithipunal
Seithipunal


விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் அதிகாரிகள் தூங்கி வழிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் அந்த துறையின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு நடக்கும் இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து 100 மேற்பட்ட விவசாயிகள் வருகை புரிந்திருந்தனர். மாவட்ட ஆட்சியர் அவர்களின் குறைகள் விரைவில் சரி செய்யப்படும் என தெரிவித்திருந்தார்.

இப்படி பரபரப்பாக நடந்த இந்த கூட்டத்தில் அதிகாரிகள் சிலர் தங்கள் கைபேசிகளில் விளையாடி கொண்டும், சிலர் உறங்கி கொண்டும் இருந்துள்ளனர். இந்த செயலால் அங்கு வந்திருந்த விவசாயிகளுக்கு வேதனையை ஏற்படுத்தியது.

மழையால் அறுவடைக்கு இருந்த பயிர்கள்  நாசமான நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு நடைபெறும் இந்த கூட்டத்தில் அதிகாரிகளின் இத்தகைய செயலை கண்டு விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Farmers grievance meeting held in Thiruvarur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->