சட்டவிரோதமாக காட்டுபன்றிகாக வைத்திருந்த மின்வேலி.. பரிதாபமாய் பலியான விவசாயி..!
Farmer killed in power outage
சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், அரசும் பட்டியில் கதிர்வேல் என்பவர் விவசாயம் இவர் தனது 3 ஏக்கர் வயலில் நெல் பயிர்கள் விதைத்துள்ளார். இந்நிலையில், அந்த பகுதியில் காட்டு பன்றிகளின் அட்டகாசம் அதிகம் இருப்பதால் மின்வாரிய தெரியாமல் சட்டவிரோதமாக அந்த வயலை சுற்றியும் மின்வேலி அமைத்துள்ளார்.
அவர் அமைத்திருந்த மின்வேலியில் இருந்து அருகிலுள்ள வயலில் தேங்கியிருந்த தண்ணீரில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை அறியாத அந்த பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் அந்த தண்ணீரில் கால் வைத்துள்ளார் அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது மனைவி மின்சாரம் தாக்கப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அக்கம்பக்கதினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Farmer killed in power outage