கள்ளக்குறிச்சி.! கார் மோதிய விபத்தில் விவசாயி ஒருவர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கார் மோதிய விபத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தென்னேரி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் விவசாயி. இவர் நேற்று மதியம் எலவனாசூர்கோட்டைலிருந்து தென்னேரிகுப்பதிற்கு அவரது மொபட்டில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது திம்மலை பஸ் நிறுத்தம் அருகே சேலம்-சென்னை நான்கு வழிச் சாலையை கடக்க முயன்ற போது, சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக வெங்கடேசன் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தியாகதுருகம் காவல்துறையினர், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Farmer killed in car crash in kallakurichi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->