நத்தம் அருகே சோகம்.! அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலி.!
Farmer killed by electrocution in Dindigul
திண்டுக்கல் மாவட்டத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை விதித்த விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒத்தினிபட்டி பகுதியை சேர்ந்தவர் விவசாயி செல்வராஜ்(65). இவர் நேற்று காலை தோட்டத்தில் கட்டிய மாடுகளை அவிழ்ப்பதற்காக நேற்று மாலை சென்றுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக தோட்டத்து பகுதியில் அறுந்து கிடந்த மின்கம்பியை செல்வராஜ் விதித்துள்ளார்.
இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைப் பார்த்த பகுதியில் இருந்தவர்கள் இது குறித்து நத்தம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Farmer killed by electrocution in Dindigul