திருவள்ளூர்: வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி பரிதாப பலி..!
Farmer killed by electric shock
வயல்பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்தால் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்ப த்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ராஜபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (60). விவசாயியான இவர் தினமும் தனது வயலுக்கு சென்று பார்த்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
சம்பவதன்று, அவரது வயலுக்கு சென்ற அவர் நீண்ட நேரமாகியும் அவர் திரும்ப வராததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் வயலில் அறுந்து கிடந்து மின் கம்பியை மிதித்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Farmer killed by electric shock