மின்வாரியத்தின் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி விவசாயி பலி..! - Seithipunal
Seithipunal


அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்து விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் , மேலச்சிறுபோது கிராமத்தில் வசித்து வருபவர் முத்தையா. இவர் அந்த பகுதியில் விவசாயியாக இருந்து வருகிறார். இவர் தனது வயலுக்கு செல்லும் போது வயலில் உயர்மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்துள்ளது.

இதனை கண்டுகொள்ளாமல் அவர் கால் வைத்த போது தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்தில்யே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

வயல்வெளியில் தாழ்வாக சென்ற மின்கம்பிகளை சீரமைக்க பல முறையும் சொல்லியும் மின்வாரியம் கண்டுகொள்ளதது தான் இதற்கு காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Farmer killed by electric shock


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->