#பெரம்பலூர் || இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


பெரம்பலூரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் அனுக்கூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் விவசாயி வெங்கடேசன் (43). இவர் பெரம்பலூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

பின்பு பெரம்பலூரில் இருந்து எசனை பகுதியாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வெங்கடேசன் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக வெங்கடேசன் உயிரிழந்துள்ளார்.

இதுயடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Farmer killed by Car accident


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->