வாங்கிய கடனை கட்ட முடியததால் விவசாயி எடுத்த விபரீத முடிவு..! - Seithipunal
Seithipunal


வாங்கிய கடனை கட்ட முடியாததால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

திருநெல்வேலி மாவட்டம் லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இவர் அந்த பகுதியில் விவசாய வேலை செய்து வருகிறார். நிலையில் புதியதாக வீடு கட்டுவதற்கு வங்கியில் கோபாலகிருஷ்ணன் கடன் வாங்கியுள்ளார்.

ஆனால் அந்த கடனை அவர் சரிவர கட்டவில்லை என்று கூறப்படுகிறது. கடனை சரியாக கட்டாததால் கோபாலகிருஷ்ணன் மன உளைச்சலில் இருந்துள்ளார் இந்நிலையில் கடந்த மாதம் 31ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Farmer commits suicide


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->