12ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய விவசாயி.. போக்சோவில் கைது.!
Farmer arrested for pregnanting 12 class girl in Cuddalore
கடலூர் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாகிய விவசாயியை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மருதூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சேகர் (50). இவரது மனைவி விஜயா. இந்நிலையில் விஜயாவிற்கு அடிக்கடி உடல்நல குறைவு ஏற்பட்டு வந்ததால், உதவியாக அதே பகுதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் 16 வயதுடைய சிறுமி வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.
இதையடுத்து சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சேகர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி நான்கு மாத கர்ப்பமானார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சேகரை கைது செய்தனர்.
English Summary
Farmer arrested for pregnanting 12 class girl in Cuddalore