14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 17 வயது சிறுவன் போக்சோவில் கைது..!!
Family-run boy arrested with 14-year-old girl
14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயல் கிராமத்தில் 14 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் கீழ்பாக்கம் மருத்துவமனையில் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில். அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் அந்த சிறுமி பழகி வந்தது தெரியவந்தது.
இதை பயன்படுத்தி அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளான். இதனால் அந்த சிறுமி கர்பமடைந்துள்ளார். இதனை அடுத்து இருவீட்டார் சம்மதத்துடன் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
இதனை அடுத்து அந்த சிறுமிக்கு வலி வந்ததும் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். இதனால் இந்த விஷயம் தெரிந்துள்ளது. அந்த சிறுவனை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
English Summary
Family-run boy arrested with 14-year-old girl