இது என் புள்ள இல்ல.. அம்மிக்கல்லை தூக்கிய மனைவி.! துடிதுடிக்க அரங்கேறிய கொடூரம்.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டாபிராம் பகுதியை சேர்ந்த ராஜ், இவருக்கு வயது 27.  இவரது மனைவி கௌரி(25). இந்த தம்பதிக்கு ஒன்றை வயதில் ஆகாஷ் என்ற மகன் இருக்கிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ராஜ், தினமும் குடித்துவிட்டு மனைவியுடன் போடுவார்.

இதை தொடர்ந்து, அவர் மனைவி மீது சந்தேகப்பட்ட ராஜ் உன் மகன் எனக்கு பிறக்கவில்லை, அதனால் அவனை கொல்லப் போகிறேன் என்று கௌரியை மிரட்டிவந்துள்ளார். இந்த நிலையில் ஒருநாள் குடிதித்துவிட்டு போதையில் வீட்டிற்கு வந்த ராஜ் தனது மனைவி மற்றும் மகனை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்.

கணவனின் செயலால் ஆத்திரம் அடைந்த கௌரி  பக்கத்தில் இருந்த அம்மி கல்லை ராஜ் மண்டையில் போட்டு அவரை கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். பூட்டிய வீட்டில் இரண்டு நாட்களுக்கு பிறகு துர்நாற்றம் வந்ததை அடுத்து அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள்.

பிறகு, தலைமறைவாக இருந்த கௌரியை கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த இந்த நிகழ்வுக்கு நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியது.

அவர் கணவனை கொலை செய்த குற்றத்திற்காக கௌரிக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

family issue murder in pattabiram


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->