10 வகுப்பு வரை மட்டுமே படித்து தமிழகத்தில் மருத்துவமனை நடத்தி வந்த மேற்குவங்க போலி டாக்டர் கைது.! - Seithipunal
Seithipunal


ஊத்துக்கோட்டையில் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து மருத்துவமனை நடத்தி வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். 

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தலைமை அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் மாறன். இவர் இன்று ஊத்துக்கோட்டை பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது 10-ம் வகுப்பு மட்டுமே படித்துள்ள சுபல்குமார் மாண்டல் (வயது41) என்பவர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்துவந்தது தெரியவந்து. இதுகுறித்து டாக்டர் மாறன் ஊத்துக்கோட்டை போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் போலி டாக்டர் சுபல்குமாரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மேற்கு வங்கத்தை சேர்ந்த சபல்குமார் 10-ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு ஊத்துக்கோட்டையில் 15 வருடங்களாக மருத்துவமனை நடத்தி வந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fake West Bengal doctor studied only up to 10th standard and ran a hospital in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->