கவர்மெண்ட் வேலை வேணுமா.? தலைய காட்டுங்க.! ஏறி நின்று வேலை காட்டும் சாமியார்.!
FAKE SAMIYAR IN KRISHNAGIRI
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் போச்சம்பள்ளி பகுதியில் டிராக்டர் மெக்கானிக்காக இருந்து வந்தவர் தான் பிரபு. இவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு திடீரென ஞானோதயம் பிறந்து இருக்கின்றது.
எனவே, அருள் வாக்கு கூறும் மையம் ஒன்றை அவர் தொடங்கி இருக்கின்றார். மையம் தொடங்கிய காலத்தில் பக்தர்கள் அவ்வளவாக இல்லை இருப்பினும், சிறிது நார்களில் நன்றாகக் கல்லா கட்டி இருக்கின்றது. அவரிடம் குறி கேட்க வருபவர்களின் தலை மீது ஏறிக் குறி சொல்வதை வழக்கமாக அவர் கொண்டுள்ளார்.
மேலும், இவருக்கு சில சீடர்களும் இருக்கின்றார்களாம். குறி கேட்டு அவரிடம் வருபவர்களிடம் அரசு வேலை வாங்கி தருகிறேன். லாட்டரியில் உங்களுக்குப் பணம் விழ வைக்கிறேன் என பூஜை செய்வதாக கூறி ஆயிரக் கணக்கில் பணம் வாங்கி கொள்வாராம். இது போதாது என்று வேண்டியவருக்கு வேலை கிடைத்தால் கமிஷன் பணமும் பெற்று கொள்வாராம்.
ஒரு முறை இவரிடம் குறி கேட்க வந்த நபர், தனது காரையே காணிக்கையாக கொடுத்து விட்டாராம். குடிசை வீட்டில் குறி சொல்ல ஆரம்பித்த பிரபு தற்போது மக்களிடம் பெரும் காணிக்கையை வைத்தே புது வீடு கட்டி வருகின்றாராம். மக்கள் கூட்டம் இவரை காண அலைமோதுகின்றது. இதனால், போலீசார் இவர் போலி சாமியாராக இருப்பாரோ என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
English Summary
FAKE SAMIYAR IN KRISHNAGIRI