திருமணம் ஆசை காட்டி மாணவியை கற்பழித்த நாடககாதலன்..! கதறும் பெண்ணின் பெற்றோர்கள்..!
fake lover raped colleage student in salem
தமிழகத்தின் சேலம் மாவட்ட ஓமலூரில் உள்ள ஜலகண்டாபுரம் என்னும் பகுதியில் வெங்கடேஷ்- தேவி என்னும் தம்பதி வசித்து வருகிறார். இவர்களுக்கு 17 வயது மகள் இருக்கிறார். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவி ஆவர். இந்த சிறுமி கடந்த இரண்டு நாட்களுக்கு முன், இரவு 10 மணி அளவில் வீட்டின் பக்கத்தில் இருக்கும் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
வெகு நேரம் கழிந்தும் கடைக்கு சென்ற சிறுமி வீடு திரும்பாத காரணத்தினால் பயந்து போன பெற்றோர் அந்த பகுதி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்கள். மேலும், அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஓமலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள். அதில், அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(21) என்ற வாலிபர் கடைக்கு சென்ற அந்த 17 வயது மாணவியைக் கடத்தியது தெரியவந்தது.
அதன் பின், அந்த வாலிபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கடத்தி சென்று அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார். இதை தொடர்ந்து, காவல்துறையினர் சிறுமியை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தார்கள். பின்னர் சதிஷ்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து, சேலம் மகளீர் நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள். பின்னர், தற்போது சதீஷ் சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.
இதை தான் நாடக காதல் என்று கூறுகிறார்கள். பள்ளி படிக்கும் சிறுமிகளையும், கல்லூரி பயிலும் மாணவிகளையும் காதல் வலையில் சிக்க வைத்து, திருமணம் ஆசை காட்டி அவரது கற்பை சூறையாடுவதே நாடக காதல். இதனால் பாதிக்க படுவது அப்பாவி பெண்களும், பெண்ணின் பெற்றோர்களும் தான்.
English Summary
fake lover raped colleage student in salem