#மயிலாடுதுறை | கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞர். வன்னியர் சங்கத்தினர் போராட்டம்.!
EX Vanniyar Sangam Member Killed in Mayiladuthurai
மயிலாடுதுறை கொத்ததெருவை சேர்ந்தவர் கண்னன். இவருக்கும் அதே தெருவில் வசித்து வரும் கதிரவன் என்பவருக்கும் இடையில் ஒரு வருடம் முன்பு உணவகத்தில் சாப்பிடும் போது தகராறு ஏற்பட்டது. இதில், ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். கதிரவன் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட கண்ணன் சில நாட்களுக்கு முன் வெளியே வந்தார்.
இந்நிலையில், சம்பவம் நடந்த நேற்று இரவு கண்ணன் தனியாக நடந்துவருவதை நோட்டமிட்ட கூலிப்படை கும்பல், அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது. இதில், கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் கூலிப்படை கும்பலை தேடி வருகின்றனர். இதற்கிடையே, வன்னியர் சங்கத்தினர் கண்ணனின் படுகொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் போராட்டம் செய்து வருகின்றனர்.
English Summary
EX Vanniyar Sangam Member Killed in Mayiladuthurai