வீரலட்சுமியின் வீரம் இல்லாத மனது.. மகள்களின் எதிர்காலத்தை எண்ணி அரங்கேற்றிய சோகம்.!! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாம்பாளையம் ஜீவா நகர் பகுதியை சார்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி வீரலட்சுமி (வயது 31). இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். கணவன் - மனைவி இருவருமே பழைய இரும்புக்கடை வியாபாரம் செய்து வந்துள்ளனர். 

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பழைய இரும்பு கடையில் சரிவர வியாபாரம் ஆகாத நிலையில், தனது மகள்களை எப்படி படிக்க வைப்பது?. என்று எண்ணி வீரலட்சுமி புலம்பி வந்துள்ளார். 

இதனால் கடுமையான மனவிரக்திக்கு உள்ளான வீரலட்சுமி, தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். உயிருக்கு போராடிய நிலையில் இருந்த வீரலட்சுமியை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி வீரலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode women suicide due to No Income


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->