ஈரோடு: அதே சம்பவம்.. அன்பான கணவனை விட்டு, பயங்கர கொலை.. துள்ளத்துடிக்க சம்பவம்..!! - Seithipunal
Seithipunal


நடத்தையில் சந்தேகப்பட்ட கணவனை தூக்க மாத்திரை கொடுத்து கூட்டாளிகளை அழைத்து கழுத்தை இறுக்கி மனைவி கொலை செய்துள்ள பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. 

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம் குள்ளம்பாளையம் நஞ்சப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் கோபி பேருந்து நிலையத்திற்கு எதிரே சலூன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு பிரபா என்ற மனைவியும், ஒரு மகளும் இருக்கின்றனர். 

தற்போது ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்ல இயலாத சீனிவாசன், குடும்பத்தினருடன் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், சீனிவாசனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருப்பதாகக் கூறி, அவரது மனைவி கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக தனியார் மருத்துமனையில் கணவரை சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளார். 

சீனிவாசனின் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். கடந்த 2 நாட்களாக அவருக்கு இருமல் மற்றும் சளி, காய்ச்சல் இருந்து வந்ததாக கூறிய பிரபா மருத்துவர்களிடம் அழுதபடியே தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், சீனிவாசன் இறந்த தகவலை அறிந்த அவரது உறவினர் மாரிமுத்து என்பவர், மருத்துவமனைக்கு வந்திருந்த போது சீனிவாசனின் கழுத்தில் காயம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து, சீனிவாசனின் உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக கூறி கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

விசாரணையில், வீட்டில் இருக்கும் பிரபா எந்த நேரமும் செல்போனும் கையுமாக இருந்து வந்துள்ளார். இதன் மூலமாக பிரபாவுக்கு ஆண் நண்பர்கள் பழக்கம் ஏற்பட்ட நிலையில், அவர்களுடன் பேசி வந்துள்ளார். வீட்டில் சீனிவாசன் இருந்த நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகாத வார்த்தைகள் பேசி கண்டித்ததாக கூறப்படுகிறது. 

இதனால் கடுமையான ஆத்திரமடைந்த பிரபா, தனது ஆண் நண்பர்களுடன் பேச இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். நமது மகிழ்ச்சிக்கு கணவன் தடையாக இருப்பதாக எண்ணிய மனைவி, கணவனை கொலை செய்ய திட்டமிட்டு தனக்கு தெரிந்த குமாரபாளையம் சலூன் கடை வெள்ளையங்கிரி மற்றும் புரோட்டா மாஸ்டர் சரவணகுமாரிடம் யோசனை கேட்டுள்ளார். 

ஏற்கனவே சரவணகுமாருக்கு பிரபாவின் மீது ஈர்ப்பு இருந்து வந்த நிலையில், அவன் பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து சீனிவாசனை கொலை செய்யலாம் என்று திட்டம் தீட்டி கொடுத்துள்ளான். இதனையடுத்து திட்டப்படி, சம்பவத்தன்று கணவனுக்கு அதிக தூக்க மாத்திரை கலந்த பாலை கொடுக்கவே, சீனிவாசன் அதனைக்குடித்து அயர்ந்து உறங்கியுள்ளார். 

இதன்போது வீட்டிற்குள் வந்த பரோட்டா மாஸ்டர் சரவணகுமார் மற்றும் வெள்ளியங்கிரி ஆகிய இருவரும் சேர்ந்து சீனிவாசனின் கழுத்தை கயிற்றால் இறுக்க, சீனிவாசன் திமிராமல் இருக்க பிரபா அவரின் கால்களை பிடித்துள்ளார். பின்னர் கொலை சம்பவம் நடந்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபா, வெள்ளையங்கிரி, சரவணகுமார் ஆகிய 3 பேரும் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode Woman Prabha Murder his Husband Srinivasan Police Investigation 26 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->