குடும்பத்தை காப்பாற்ற உழைக்க சென்ற பெண்.. பார்வையும், மனதும் குருடானதால் கொடூரனின் பயங்கர செயல்.!
Erode wife Murder by Husband police arrest
ஈரோடு மாவட்டத்தில் உள்ள டி.என்.பாளையம் அருகேயுள்ள வாணிபுத்தூர் பள்ளத்தூர் பகுதியை சார்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 40). இவரது மனைவி கவிதா (வயது 35). மோகனசுந்தரம் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில், இவர்கள் இருவருக்கும் கார்த்திகேயன் என்ற 17 வயது மகனும், கோகுல்நாத் என்ற 15 வயது மகனும் உள்ளனர்.
கோகுல்நாத் பத்தாம் வகுப்பு பயின்று வரும் நிலையில், கார்த்திகேயன் வெளியூருக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் காலை நேரத்தில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அவரது தாயார் கவிதா வாயில் நுரைதள்ளியவாறு பிணமாக இருந்துள்ளார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து கார்த்திகேயன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, கவிதாவின் கணவர் மோகனசுந்தரம் வாணிபுத்தூர் கிராம நிர்வாக அலுவலகரிடம் சரண் அடைந்துள்ளார். இவரிடம் மேற்கொண்ட விசாரணையில் மனைவி கவிதாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
இவர் அளித்த வாக்குமூலத்தில், " நான் பார்வை குறைபாடு கொண்டவன். இதனால் பணிகளுக்கு செல்லாமல் வீட்டில் இருந்த நிலையில், எனது மனைவி கவிதா மற்றும் மகன் கார்த்திகேயன் பணிக்கு சென்று வந்தனர். இதனால் எனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில், அடிக்கடி தகராறு செய்து வந்தேன்.
ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த நான் கொலை செய்ய முடிவு செய்து, சம்பவத்தன்று அவருக்கு கடையில் இருந்து தேநீர் வாங்கிவந்து விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர், கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Erode wife Murder by Husband police arrest